Friday, June 7, 2019

என் தாய்மொழி

என் தாய்மொழி

என்னைத் தாலாட்டிய மொழி
எனதருமைத் தாய் மொழி
என் இனிய தமிழ் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி

என்னை நான் தொலைத்த போது
என்னுள்ளே புதைந்த போது
எண்ணெய் ஆக மிதந்து என்
எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி

இதயத்தின் நாளங்கள் முஹாரி மீட்டினாலும்
இனிமையான கல்யாண ராகம் பாடினாலும்
இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய்
இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே

முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில்
முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும்
முகவரி இழக்காது இலக்கிய உலகில்
முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி

கம்பன் என்றொரு கவிஞனும்
கர்ஜித்த பாரதி என்னும் புலவனும்
கருதுமிழ்ந்து கவிதை தந்த பாரதிதாசனும்
கண்ணதாசன் என்னும் கவியரசனும்

எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி
எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி
என்னுடல் கருகிச் சம்பலாகினாலும்
என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி

தாய் மொழி

தாய் மொழி

பிறந்து சிறந்த மொழி அல்ல தமிழ் ,
சிறந்து பிறந்த மொழி எங்கள் தமிழ் .

உயிருக்கு உயிர் எழுத்தாய்
மெய்க்கு மெய் எழுத்தாய்
உலகுக்கு உயிர்மெய் எழுத்தாய் விளங்கும் தமிழ் .

மொழிகளின் பிறப்பிடம் தமிழ் என்போம்
தமிழின் பிறப்பிடம் குமரி என்போம்

ஊமையாய் திரிந்து
செய்கையாய் மாற்றம் பெற்று
ஒலியாய் ஒலித்து
பின் வரியாய் நீ வடிவெடுத்தாய் ..

உன்னை செப்பம் செய்கையில்
செந்தமிழ் ஆனாய்...

செந்தமிழில் இருந்து
வேறுபட்டு பேசையிலே எழுதையிலே
கொடுந்தமிழ் ஆனாய்...

பிற மொழிகளிடம் இருந்து
தனித்து நிற்கையில்
தனிதமிழ் ஆனாய்..

இயன்ற வரை
நற்சொல் கொண்டு பேசையிலே
நற்றமிழ் ஆனாய்..

பண்ணிசைத்து பாடையில் இசைத்தமிழ் ஆனாய்..
இயல்பாக பேசையில் இயல் தமிழ் ஆனாய்..
கூத்தாடி பாடையில் நாடக தமிழ் ஆனாய்..

இயல் இசை நாடகம்
இவைகளுடன் இணைந்து
முத்தமிழ் ஆனாய்..

பேச்சிலே வேறுபட்டாலும்
எழுதையிலே ஒன்றாய்

குமரியில் பிறந்தாலும்
தென் மேற்கு வட கிழக்கு என
பல கிளை மொழியானாய் ..

இத்தனை பெருமைகளை கொண்ட உன்னை
பிற மொழி கலப்பால் கலங்க படுத்தினோம்
தனி மொழி தாய் மொழி என பெருமை பட வேண்டிய உன்னை
பிற மொழி முன் மொழி என வெறுத்து ஒதுக்கினோம்

பிற மொழியில் பேசும் மூடர்க்கு தெரியாது
பிற மொழியின் பிறப்பிடமே நீ தான் என்று ..

தமிழன் அழியும் வரை அல்ல
மனிதன் அழியும் வரை தமிழ் அழியாது
கற் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மொழி தமிழ் மொழி..

ஆதி அந்தம் தமிழே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ......