Thursday, November 13, 2014

வியக்க வைக்கும் தமிழ் எண்ணியலின் சிறப்பு!

தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள். ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது. தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.


இந்து-அரேபிக் (INDO-ARABIC), ரோமன்(ROMAN) எண்களை பற்றி சொல்லிக்கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக்கொடுக்க தவறிவிட்டது. தமிழர் எண்ணியல் தமிழ் மக்களுக்கு சேரும் வண்ணம் இனி வரும் சந்ததியினருக்குத் தமிழ் எண்கள் குறித்து சொல்லிக் கொடுப்போம்

No comments :

Post a Comment